சென்னை: நயன்தாரா நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இந்த படத்தை சுந்தர் இயக்குகிறார். சுந்தர் சி.சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது உதவி இயக்குனர் நயன்தாராவிடம் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்கினார். அப்போது நயன்தாரா குறுக்கிட்டு சில கேள்விகள் கேட்க, அதற்கு உதவி இயக்குனர் பதில் சொன்னதும் நயன்தாரா ஆவேசமாக பேசினார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா சுந்தர். சிக்கு பிடித்த நடிகை. எனவே இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
காரணம், லாபத்தில் பங்கு உட்பட பல நிபந்தனைகளை விதித்த பிறகே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நயன்தாரா. இதனால் அவரது செயலால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.