சென்னை: நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு பரபரப்பாக நீடிக்கிறது. இந்த வழக்கில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை இந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி மற்றும் பாடகி கெனிஷா இருவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. நிகழ்ச்சிக்கு தனித் தனி கார்களில் வந்தாலும், இருவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசியுள்ளனர்.

இவை எல்லாம் நடந்து வரும் நேரத்தில், ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து விவகாரம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்த்தி, விவாகரத்துக்குப் பிறகு மாதம் ₹40 லட்சம் ஜீவனாம்சமாக வேண்டும் என கோரியுள்ளார். வழக்கின் தொடர்ச்சியில், இருவரும் ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிட்டதால் நீதிமன்றம் அது தொடர்பான உத்தரவை பிறப்பித்தது.
அதே சமயம், ஜெனிஷா, தன்மீது பொய்யான மற்றும் ஆபாசமான தகவல்களைப் பகிர்வதாகக் குற்றம்சாட்டி, சட்ட நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால், இந்த விவகாரம் அதிகமான ஊடகங்களில் பெற்றது. இந்நிலையில், ரவி மற்றும் கெனிஷா இருவரும் மறுபடியும் ஒன்றாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது மேலும் கவனம் பெற்றுள்ளது.
இவர்கள் எல்கே கணேஷ் இல்ல திருமண நிகழ்விலும் ஒன்றாகக் காணப்பட்டனர். தற்போது சதர்ன் பிரீமியர் லீக் டென்னிஸ் பால் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் இணைந்து பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் தனித்தனியாக வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களை சந்தித்த ஜெயம் ரவி, தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேச மறுத்தார்.