சென்னை : உலக அளவில் கவனம் ஈர்த்து வசூலில் வேட்டையாடிய பாகுபலி இரண்டு பாகங்களும் சேர்த்து ஒரே திரைப்படமாக வெளியிட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, ரானா டகுபதி, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் நடித்திருந்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் சாதனை படைத்த இந்த திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.
பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்டாகி வரும் நிலையில், பாகுபலி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கப் போகிறது. அதன் இரண்டு பாகங்களின் முக்கிய காட்சிகளை இணைத்து ஒரே படமாக்கி திரையிடப் போகிறார்கள்.
வரும் அக்டோபரில் ரசிகர்கள் இதை கண்டுகளிக்கலாம். பாகுபலியின் இரண்டு பாகங்களுமே மெகா ஹிட் அடித்ததுடன், சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றன. எந்தெந்த முக்கியமான காட்சிகளை ஒரே படமாக இணைக்கு உள்ளனர் என்று எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.