தெலுங்கு இயக்குனர் புரி ஜெகன்னாத்தின் பான் இந்தியா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதில் தபு மற்றும் சம்யுக்தாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்திய ஒரு நேர்காணலில், அவர் கூறுகையில், “கதை எனக்குப் பிடித்திருந்தால், நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஒரு இயக்குனரை அவரது கடந்த கால தோல்விகளை வைத்து நான் மதிப்பிடுவதில்லை.
நான் ஏன் அவரை அப்படி மதிப்பிட வேண்டும்? புரி ஜெகன்னாத் இயக்கிய படம் முழுக்க முழுக்க ஆக்ஷன். நான் இதற்கு முன்பு இதுபோன்ற படத்தில் நடித்ததில்லை. நடிகை தபுவுடன் நான் நடிப்பது இதுவே முதல் முறை. அவருக்கு ஒரு முக்கியமான வேடம்.

திறமையான நடிகருடன் நடிப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் நடித்த ‘மகாராஜா’ படத்தின் வெற்றியைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். இந்தப் படம் நான் நடித்ததிலேயே மிகவும் கடினமான வேடம்.
அழுத்தமான கதைகளைக் கொண்ட படங்களில் நடிப்பதுதான் எனது பலம். அதற்காக நான் முற்றிலும் பொழுதுபோக்கு படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்த்தமல்ல.”