சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணி என்றால் மிகவும் விரும்புவார்கள். குறிப்பாக சிக்கன் பிரியாணி, மசாலாக்களுடன் சேர்த்து சமைப்பது அதன் நறுமணத்தினால் பிரியாணி மீது உள்ள காதலை மேலும் அதிகரிக்கும். காலை, மாலை, இரவு என எந்த நேரத்திலும் சாப்பிடப்படும் இந்த பிரியாணி, பலருக்கும் விருப்பமான உணவாக இருக்கின்றது. இன்று கோடை வெயில் கொஞ்சம் அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் கிச்சனில் நிற்காமல் எளிதாக சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
500 கிராம் சிக்கன், 4 பெரிய வெங்காயம் (நறுக்கியது), 2 தக்காளி, 5 பச்சை மிளகாய், 1 எலுமிச்சை (சாறு பிழியவும்), ஒரு கப் புதினா மற்றும் கொத்தமல்லி, 3 டீஸ்பூன் தனியாத்தூள், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம், 8 கிராம்பு, 3 அன்னாசிப்பூ, 2 பிரியாணி இலை, 12 ஏலக்காய், 5 துண்டுகள் பட்டை, எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில், சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்பு, அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். குக்கர் சூடானதும் பிரியாணி இலை சேர்த்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு, புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக, சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், அரைத்த பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரிசி சேர்த்து கிளறவும். பிறகு, குக்கரை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து பிரியாணி எசென்ஸ் சேர்த்து நன்றாக கிளறி, 15 நிமிடங்கள் மூடிவைத்து எடுத்துக் கிளறவும். இந்த முறையில், சிக்கன் பிரியாணி வெறும் 20-30 நிமிடங்களில் சுவையாக தயாராகி உங்கள் விருந்தினர்களுக்கு பரிமாறப்படுகிறது.