இட்லி, தோசை என்றாலே பலருக்கு பேரிருப்பு. குறிப்பாக மெத்து மெத்தென, பஞ்சுபோல் இட்லி என்றால் சாப்பிட ஆவலாக இருக்கும். ஆனால் இன்று கடைகளில் அந்த வகை இட்லிகள் கிடைப்பது மிகவும் அரிது. மிகச் சில இடங்களில் மட்டுமே சாஃப்ட் இட்லி கிடைக்கிறது. பலருக்கும் தோன்றும் கேள்வி, “அவர்கள் எப்படி அந்த மாதிரி இட்லி செய்கிறார்கள்?” என்பதற்கான விடைதான் இக்கட்டுரை.

முதலில், தேவையான பொருட்களை சரியாகத் தேர்வு செய்வது முக்கியம். நான்கு கப் இட்லி அரிசி, ஒரு கப் உளுந்து மற்றும் அரை கப் ஜவ்வரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தில் ஐந்து வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை தனித் தனியாக நன்கு கழுவி, ஒவ்வொன்றாக ஊற வைக்க வேண்டும். ஊற வைக்கும் நேரம் 5 மணி நேரம் போதும்.
மாவு அரைக்கும் போது, முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு நன்கு மையமாக, க்ரீமியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரிசி மற்றும் ஜவ்வரிசியையும் சேர்த்து அரைக்க வேண்டும். மூன்றையும் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து, கையால் நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையை இரவு முழுக்க வெளியே வைத்து புளிக்க வைக்க வேண்டும். காலையில் மாவு நன்றாக புளித்திருக்கும். அதன் பிறகு, உங்கள் விருப்பப்படி இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்கலாம். இவ்வாறு செய்தால் இட்லி மெத்து மெத்தென, பஞ்சுபோல வந்திருக்கும்.
தோசைக்கு பயன்படுத்தினாலும், மென்மையாகவும் சுருள் செய்யக்கூடிய வகையில் இருக்கும். இந்த ரெசிபி மூலம் நீங்கள் வீட்டிலேயே ஹோட்டல் தரம் வாய்ந்த இட்லி, தோசையை சமைக்க முடியும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் – உண்மையிலேயே இந்த முறை மிகவும் வெற்றி தரும்.