சென்னை: சேனைக்கிழங்கில் வடையா செய்து பாருங்கள் கரகர மொறு மொறுவென சூப்பர் சுவையுடன் இருக்கும். இந்த வடை. ரொம்ப மெனக்கெடாமல் எளிதாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
சேனை – 1/2 கிலோபொட்டுக்கடலை மாவு – நான்கு ஸ்பூன்அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்வெங்காயம் – ஒன்றுதேங்காய் துருவல்இஞ்சி – ஒரு துண்டுபச்சை மிளகாய் – இரண்டுகாரப்பொடி – ஒரு ஸ்பூன்சோம்பு – ஒரு ஸ்பூன்கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு
செய்முறை: சேனை கிழங்கை முழுவதுமாக வேகவிடாமல் முக்கால் பதத்திற்கு வேக விட்டு நன்கு கரண்டியால் கொரகொரப்பாக மசித்துக்கொண்டு பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு நசுக்கியது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், காரப்பொடி, சோம்பு ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெயில் வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும். ருசியான வடை தயார்.