ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சி.. ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் 13 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் லிண்ட்மேன் என்ற தீவு அருகே சென்றபோது ஆஸ்திரேலியாவின் எம்.ஆர்.எச். தைவான் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
அங்குள்ள டென்ட் தீவு அருகே ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அதில் இருந்த 4 ராணுவ வீரர்களுக்கு என்ன நடந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.