6 முதல் 11 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம், இலவச லேப்டாப்: அதிரடி அறிவிப்பு..!
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இனி சிபிஎஸ்இ பாடத்திட்டம் வழங்கப்படும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை சிபிஐ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
மேலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றார். புதுச்சேரி பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கும் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என அரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் ரங்கசாமியின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.