May 23, 2024

அண்ணாமலை- அமித்ஷா டெல்லியில் பரபரப்பு சந்திப்பு

புது தில்லி:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். 20 நிமிடம் பேசினார்கள்.இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபையில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்தும் அவர் விவாதித்ததாக தெரிகிறது. இதேபோல், தமிழகத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் யாத்திரை குறித்து அமித்ஷாவிடம் அண்ணாமலை விளக்கினார்.

இந்த சந்திப்பின் போது, ​​தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணாமலை அமித் ஷாவை சந்தித்து  ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!