நடராஜர் கோவிலில் சிவ பக்தர்களை தாக்கிய சம்பவம்: சிதம்பரம் பேருந்து நிலையம் மற்றும் நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள்
சிதம்பரம்:
சிதம்பரம் மாவட்டம், கடலூர் அண்ணாமலை நகர் அருகே உள்ள சிவபுரியைச் சேர்ந்தவர் கார் வண்ணன். சிவ பக்தன்.
இவர் கடந்த 21-ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள 21 படிக்கட்டுகள் அருகே சென்றபோது, கோவில் தீட்சிதர்களுக்கும் கார்வண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவில் பக்தர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கினர். இதுபற்றி சிதம்பரம் நகர போலீசில் கார் வண்ணன் புகார் செய்தார்.
இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் மற்றும் நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த பக்தர் கார் வண்ணன் சுவாமியை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.