June 25, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் – தேமுதிக

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

“2024-ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல், பொதுத்தேர்தல்களிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. தேர்தலை புறக்கணிப்பதே காரணம்.

தேர்தல்கள் ஜனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டிய தேர்தல்கள், ஆட்சியர்களின் அதிகாரத்தால் தவறாக நடத்தப்படுகின்றன. இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லாததால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. தொண்டர்களின் உழைப்பை வீணடிக்கக் கூடாது என்று புறக்கணிக்கிறது.

இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் தேர்தல் ஜனநாயகம் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று பெருமிதத்துடன் கூறினாலும், இன்று ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை ஒட்டுமொத்த மக்களுக்கும், கட்சிக்கும் தெரியும்.

எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!