தங்கம் விலை உயர்வு: 5 நாட்களில் சவரனுக்கு ரூ.760 உயர்வு..!!
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது, தங்கம் விலை எதிர்பாராத விதமாக சரிந்தது. அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 11-ம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.45,800-க்கு விற்பனையானது.
விலை வீழ்ச்சியால் கடந்த ஆண்டை விட தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு பின் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
சில நாட்களில் பெயரளவிற்கு மட்டுமே குறைக்கப்பட்டது. கடந்த 16-ம் தேதி தங்கம் விலை ரூ.45,080-க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி தங்கம் விலை ரூ.45,600 ஆகவும், கடந்த 18-ம் தேதி தங்கம் விலை ரூ.45,600 ஆகவும் இருந்தது.
19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சனிக்கிழமை விலைக்கே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் தங்கம் சந்தை துவங்கியது.
தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,705 ஆகவும், கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.45,640 ஆகவும் இருந்தது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று எதிர்பாராத ஏற்றத்தை சந்தித்தது.
நேற்று காலை மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,730 ஆகவும், சவானுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840 ஆகவும் இருந்தது. அதே சமயம் தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.