May 19, 2024

வருடத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா? கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சைக்குதான்!!!

நியூயார்க்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையின் சம்பள விவரம் கூகுள் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை ஆவார். 2022-ம் ஆண்டுக்கான இந்திய மதிப்பில் அவருக்கு ரூ.1,846 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி, ஊழியர்களுக்கான சலுகைகள் பெருமளவு குறைக்கப்பட்டு, 12 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுந்தர் பிச்சை மற்றும் மற்ற பணியாளர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் ஊழியர்களிடையே புயலை கிளப்பியுள்ளது.

சுந்தர் பிச்சை சராசரி பணியாளரை விட 800 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கூகுளின் தகவல் தொடர்பு பக்கங்கள் கருத்துகள் மற்றும் மீம்ஸ்களால் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

நிதிச் சேமிப்பு என்பது பணியாளர்களுக்கு மட்டும் அல்ல, கடின உழைப்பாளிகள் மற்றும் பெருநிறுவன துணைத் தலைவர்களுக்கு மட்டுமே. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கடந்த ஆண்டு 40 சதவீத ஊதியத்தை குறைத்ததை கூகுள் ஊழியர்கள் சுட்டிக்காட்டினர். கடந்த 2021ம் ஆண்டு சுந்தர் பிச்சை 2,200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!