June 25, 2024

மேனகாவிடம் ரூ.100 கோடி கேட்டு இஸ்கான் வழக்கு

கொல்கத்தா: இறைச்சிக்காக மாடுகளை இஸ்கான் விற்றதாக குற்றம்சாட்டிய மேனகா காந்தி மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால்நடை ஆர்வலரும், பாஜக எம்பியுமான மேனகா காந்தி, பசுக் கொட்டகைகளை பராமரிக்கும் இஸ்கான், இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்கான், மேனகா மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்கான் அமைப்பின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறிய மேனகா காந்திக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவரது குற்றச்சாட்டுகளால் இஸ்கான் அமைப்பின் பக்தர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்,” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!