May 19, 2024

காயம் காரணமாக மதிஷா பத்திரனா நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகல்

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வரும் மதீஷா பத்திரனா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

17-வது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இலங்கையை சேர்ந்த இளம் வீரரான மதிஷா பத்திரனா சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையில், காயம் காரணமாக சில போட்டிகளில் தவறவிட்ட அவர், சிஎஸ்கே விளையாடிய கடைசி 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், தசைநார் முறிவு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை சென்றார். சிகிச்சைக்கு பின் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!