May 14, 2024

மழையில் நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு

சென்னை:

ந்த கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்வு எழுதி உயர்கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பள்ளிகளில் நேரடியாகப் படித்தவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி துணைத் தேர்வு எழுத 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வியடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தேர்வை இன்று (திங்கட்கிழமை) நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆனால் திட்டமிட்டபடி இன்று இடைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மழையிலும் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!