இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தார்.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கிவிட்டு அப்ரிடியை கேப்டனாக நியமித்துள்ளது. ரிஸ்வான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடும்.

இந்தத் தொடரில் முதல் முறையாக அப்ரிடி கேப்டனாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2024-ம் ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானை வழிநடத்திய அப்ரிடி. மொத்தம் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அணி பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.