சண்டிகரில் இருந்து வரும் செய்தியின்படி, இந்தியாவின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்தத் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், பூஞ்ச் பகுதியில் அமைந்துள்ள குருசிங் சபா சாகிப் குருத்வாரா சாய்ந்து சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் 7 மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் மெந்தார் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் பூஞ்ச் பகுதியை சேர்ந்த ஆறு பேர் உள்ளனர். மேலும் 38க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலின் போது அம்ரீக் சிங், அமர்ஜீத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இந்நிலையில் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அமைதியிழந்து பரபரப்பாகியுள்ளது.
குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை சிரோன்மணி அகாலிதள கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் ஒரு அறிக்கையை வெளியிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீக்கியர்கள் நாட்டுக்காக எப்போதும் ஆயுதம் ஏந்தத் தயார் என்றும், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு அவர்கள் பாறை போல் துணை நிற்பார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் மதநம்பிக்கைகள் மீது செய்யப்படும் தாக்குதல்களுக்கு, இந்தியா உரிய பதில் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு நிலைமை கடுமையாக எச்சரிக்கையுடன் காணப்படுகிறது. மக்கள் பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் சீக்கிய சமூகமும், இந்தியா முழுவதும் இந்த தாக்குதலை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது. நாட்டு மக்களில் தேசபக்தி உணர்வு அதிகரித்திருப்பதை இந்த நிகழ்வு ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகிறது.