மகி பௌர்ணமி தினத்தையொட்டி, மகா கும்பமேளாவில் நேற்று 73.60 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா விழா நடந்து வருகிறது. கும்பமேளாவில் நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுகின்றனர். இந்நிலையில் நேற்று மகி பௌர்ணமி தினமாகும். இந்த பெருநாளையொட்டி நேற்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.
நேற்று மட்டும் 73.60 லட்சம் பக்தர்கள் நீராடியுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமம் மற்றும் பல்வேறு நடைபாதைகளில் புனித நீராடினர். இதில் 10 லட்சம் கல்பவாசிகளும் அடங்குவர். குறிப்பிட்ட நாட்கள் நதிக்கரையில் தங்கி பூஜை செய்பவர்கள் கல்பவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்நிலையில், மாகி பௌர்ணமி நாளில் நீராடிவிட்டு, கல்பவாசிகள் பிரயாக்ராஜை விட்டு வெளியேறுவார்கள். போலீஸ் டிஜிபி பிரசாந்த் குமார், அரசு உள்துறை முதன்மை செயலாளர் சஞ்சய் பிரசாத் மற்றும் பலர் கண்காணிப்பு அறையில் இருந்து விழா ஏற்பாடுகளை கண்காணித்தனர்.