புது டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது X தளப் பதிவில் கூறியதாவது:- வெளிநாட்டு வங்கிகள் படிப்படியாக இந்திய வங்கிகளை வாங்க அனுமதிக்கப்படுகின்றன.
இந்த முட்டாள்தனமான நடவடிக்கைகள் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. முதலாவதாக, லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் DBS குழுமமும், கத்தோலிக்க சிரியன் வங்கியை கனடாவின் ஃபேர்ஃபாக்ஸும் கையகப்படுத்தின.

மூன்றாவதாக, ஜப்பானின் சுமிடோமோ மிட்சுய் வங்கி யெஸ் வங்கியையும், இப்போது துபாயின் எமிரேட்ஸ் NBD RPL வங்கியையும் கையகப்படுத்துகிறது.
இந்த நேரத்தில், 1969-ம் ஆண்டில், வெளிநாட்டு வங்கிகளை தேசியமயமாக்காததற்காக இந்திரா காந்தியை ஜன சங்கம் விமர்சித்ததை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.