போபால்: மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு 3 நாள் பயிற்சி அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்ற அமித் ஷா கூறியதாவது:- பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை மதம் குறித்து கேட்டுத் தாக்கினர். இப்போது அவர்கள் (பாகிஸ்தான்) உணவு தானியங்களுக்காக ஏங்குவார்கள். உணவுத் தேவைகளுக்காக நாடு வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.
சிந்து நதி நீர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்கைக்கு கால்வாய்கள் வழியாக கொண்டு செல்லப்படும். இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் பாசன வசதிகள் கணிசமாக அதிகரிக்கும். இது விவசாயத் துறைக்கு நிறைய பயனளிக்கும். அதே நேரத்தில், பாகிஸ்தான் ஒவ்வொரு துளி நீருக்காகவும் ஏங்கும். பாஜக நிர்வாகிகள் பேசுவதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது. அமித் ஷா இவ்வாறு கூறினார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்த நிலையில், அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்துபல்லுார் நடவடிக்கை குறித்து விளக்க ராணுவ கர்னல் சோபியா குரேஷி அவ்வப்போது ஊடகங்களைச் சந்தித்து வருகிறார். சோபியா குறித்து மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அரசியல் விவாதங்களைத் தூண்டியுள்ளன.
பாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், பயிற்சி கூட்டத்தில் சிந்தித்துப் பேசுமாறு பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.