கடந்த 2006 – 11 இல், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு மனை உரிமையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற போலீசாரின் அதிகாரி ஜாபர் சேட்டும், அவரது மனைவி உள்ளிட்டோருக்கும் எதிராக 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், 2020ம் ஆண்டு அமலாக்கத்துறை ஜாபர் சேட் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் அமர்வு, இந்த மனுவை விசாரித்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
பின்னர், சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறை வாதம் முடிந்த பின் அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பு வழங்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்தது.
உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக கூறி, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்ததை ஏற்க முடியாது என தடை விதித்தது. எனவே, ஜாபர் சேட் தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.