புது டெல்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சத்தீஸ்கரில் ரூ.2100 கோடி மதுபான ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ கவாசி லக்மா மற்றும் அவரது மகனின் சொத்துக்கள் உட்பட மொத்தம் ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை நேற்று தெரிவித்துள்ளது. 6 முறை எம்எல்ஏவாக இருந்த கவாசி லக்மா, காங்கிரஸ் ஆட்சியில் கலால் அமைச்சராக இருந்தார். அவரது மகன் ஹரிஷ் லக்மா பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.