பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதையோ அல்லது நிகழ்நேர அறிக்கையிடுவதையோ தவிர்க்க வேண்டும். முக்கியமான தகவல்களை முன்கூட்டியே நேரடியாக ஒளிபரப்புவது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை சமரசம் செய்கிறது மற்றும் பல உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

கார்கில் போர், 26/11 மும்பை தாக்குதல்கள், ஊடகங்களால் காந்தஹார் விமானம் கடத்தல் போன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, 2021-ம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகளின் பிரிவு 6(1)(b) இன் படி, நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது தாக்குதல் குறித்த விவரங்களையும் விளக்கங்களையும் வழங்க வேண்டும்.
அதை மட்டுமே ஊடகங்கள் ஒளிபரப்ப அனுமதிக்கும். நாட்டிற்கான சேவையின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்கவும், செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வையும் பொறுப்பையும் பராமரிக்கவும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.