தூய்மை ஆந்திரா – தூய்மையான திருமலை என்ற திட்டத்தின் கீழ் திருமலை முழுவதும் 8 குழுக்களாக நேற்று தூய்மை இயக்கம் நடைபெற்றது. இதில், திருமலை முதல் மலைப்பாதையின் தொடக்கத்தில் திருமலை கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெங்கையா சவுத்ரி கூறியதாவது:-
திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் இவற்றை கொண்டு வந்து பயன்படுத்திய பின் ஆங்காங்கே சாலைகளில் வீசுகின்றனர். இதனால் திருமலையில் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை வீச வேண்டும். திருமலையில் தினமும் 6,000 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று தேவஸ்தான கோசாலையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த மாட்டு தொழுவத்தில் முன்னாள் இயக்குனர் ஹரிநாத் ரெட்டி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இங்குள்ள மாடுகளை ஓங்கோலுக்கு விற்றுள்ளார். அதிக தீவனம் வாங்கியதாக பொய் கணக்கு காட்டியுள்ளார். கடந்த ஆட்சி இதை புறக்கணித்தது.
மாட்டுத்தாவணி பிரச்னைகளை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அவர்களின் தவறுகளுக்கு அவர்களைக் குற்றம் சாட்ட முயல்கிறது. தவறு செய்தவர்கள் தப்ப முடியாது. முன்னாள் இயக்குனர் ஹரிநாத் ரெட்டி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.