திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போதைய கோடை விடுமுறை காரணமாக, பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 74,374 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,477 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

இதில், ரூ.3.02 கோடி பெறப்பட்டது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக, திருப்பதி அலிபிரி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன, பக்தர்கள் சிலாதோரணம் வரை வெளியே காத்திருக்கிறார்கள். அவர்கள் தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதேபோல், ரூ.300-க்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருந்தனர்.