டெல்லி: தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு செய்வோம் என பாஜக அரசு கூறி வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி சீரமைப்பு குறித்து பேசிய திமுக எம்பி வில்சன் தொகுதி சீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி சீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும். சென்னையில் வரும் 22-ம் தேதி முதல்வர் மு.க., ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றார்.