
மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளிடையே முதல்வர், துணை முதல்வர், அமைச்சரவை பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கூட்டணியில் பா.ஜ., அதிக இடங்களை (132 இடங்கள்) கைப்பற்றியதால், முதல்வர் பதவியை பிடிக்க, பா.ஜ., விரும்பியது. அதே சமயம், முதல்வர் பதவி தங்களுக்கு வழங்கப்படாவிட்டால், உள்துறை, நிதி மற்றும் சபாநாயகர் பதவிகள் தங்கள் கட்சிக்கே ஒதுக்கப்பட வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், பாஜக மேலிடப் பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்துகொண்டனர். பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க பாஜக மத்தியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, ஃபட்னாவிஸுக்கு ஆதரவாக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் தயார் செய்யப்பட்டது.
இதையடுத்து நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரி தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் முறைப்படி கடிதம் அளித்தார். இதையடுத்து அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
பின்னர், பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் முதலமைச்சராக பதவியேற்பதை ஆதரித்து கடிதம் கொடுத்ததற்காக தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவாருக்கு நன்றி. முதல்வர் அல்லது துணை முதல்வர் என்பது வெறும் ஏற்பாடு. நான், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகிய மூவரும் இதுவரை செய்ததைப் போல இணைந்து செயல்படுவோம். நாங்கள் ஒன்றாக முடிவுகளை எடுப்போம்.
நான் நேற்று ஷிண்டேவை சந்தித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்படி கேட்டுக் கொண்டேன். சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டுத் தலைமையை ஆதரிக்கின்றனர். அப்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, “தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எனது முழு ஆதரவு உண்டு. நான் முதலமைச்சராக பதவியேற்பதை ஆதரித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.
இன்று நான் அவருக்கும் அதையே செய்துள்ளேன். எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. துணை முதல்வராக பதவியேற்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது விரைவில் தெரியும்” என்று ஷிண்டே பதிலளித்தார். அதே சமயம் அஜித் பவார், நான் சத்தியப்பிரமாணம் செய்யப் போகிறேன் என்றார். இதையடுத்து புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்க உள்ளார்.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக தேசிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.