கொல்லம்: கேரளாவில் முதல் மெய்நிகர் நீதிமன்றத்தை கேரள உயர்நீதிமன்றம் கொல்லம் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தின் பிற டிஜிட்டல் சேவைகளையும் தொடங்கி வைத்தனர்.
மெய்நிகர் நீதிமன்றத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு, வழக்கு விசாரணை, ஆஜராகுதல், விசாரணை மற்றும் தீர்ப்புகள் ஆன்லைனில் நடைபெறும்.
இந்த மெய்நிகர் நீதிமன்றம் செப்டம்பர் முதல் செயல்படும். இங்கு காசோலை மோசடி வழக்குகள் முதலில் விசாரிக்கப்பட உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் மெய்நிகர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் தகவல்களைப் பெறலாம்.