புதுடெல்லி: வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு (77) எதிரான போராட்டம் வலுத்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹசீனா தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினருடன் சமூக வலைதளங்கள் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கதேச மக்கள் மீது அக்கறை இல்லாதவர் தற்போது இடைக்கால அரசை வழிநடத்தி வருகிறார். முன்னதாக, சிறிய தொகையை மக்களுக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி வசூலித்து வந்தார். இதில் கிடைத்த பணத்தில் வெளிநாட்டில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். அப்போது அவனது ஏமாற்று வேலைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், அரசு அவருக்கு நிறைய உதவி செய்தது. ஆனால் மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. தனக்கென நல்ல காரியங்களைச் செய்தார். அவரது அதிகார மோகம் இப்போது வங்கதேசத்தை எரித்து வருகிறது.

வளர்ச்சிக்கு முன்மாதிரியாக இருந்த வங்கதேசத்தை பயங்கரவாதிகளின் நாடாக மாற்றியுள்ளார். எங்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சொல்ல முடியாத அளவுக்கு கொல்லப்படுகிறார்கள். எங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போலீசார், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். வங்கதேசத்தில் பாலியல் குற்றங்கள், கொலைகள், கடத்தல்கள் பற்றிய செய்திகள் வெளிவருவதில்லை. அவற்றை வெளியிட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதையெல்லாம் அல்லாஹ் பொறுத்துக் கொள்ள மாட்டான்.
உங்களுக்கு நீதி கிடைக்கும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இது என்னுடைய வாக்குறுதி. நான் மீண்டும் பங்களாதேஷுக்கு வருவேன். அதனால்தான் அல்லாஹ் என்னை வாழ வைக்கிறான் என்று நினைக்கிறேன். இவ்வாறு ஹசீனா கூறினார்.