புதுடெல்லி: நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக் கட்டண முறைக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 1-ம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.