புது டெல்லி: ட்ரோன்களைப் பயன்படுத்தி ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் முதல் முயற்சி ஏப்ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயிலின் அடைய முடியாத பகுதிகள் மற்றும் நடைமேடைகளை சுத்தம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்தப் பணி மிகுந்த செயல்திறன் மற்றும் துல்லியத்துடன் செய்யப்பட்டது. மனிதர்கள் அடைய கடினமாக இருக்கும் இடங்களை ட்ரோன்கள் எளிதாக அடைந்து சுத்தம் செய்ய முடியும். ரயில்களை சுத்தம் செய்யும் ட்ரோன்களில் உயர் அழுத்த நீர் முனைகள் பொருத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், பாஜக தலைவர் திலீப் கோஷ் காமாக்யா ரயில் நிலையத்தில் ரயில்களை சுத்தம் செய்யும் ட்ரோன்களின் வீடியோவை வெளியிட்டார்.

அதில், “ஒரு நாளின் முன்னேற்றத்திற்கு நவீன, மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அவசியம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்திய ரயில்வே கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகிறது. ரயில்வே உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நிகழ்நேர உள்ளீடுகளைப் பெற 2018-ல் ட்ரோன்களை அறிமுகப்படுத்தியது.
2020-ம் ஆண்டில், ரயில்வே அமைச்சகம் ‘நிஞ்ஜா ஆளில்லா வான்வழி வாகனங்கள்’ – நிகழ்நேர கண்காணிப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தன்னாட்சி பாதுகாப்பு அமைப்பு மேம்பட்ட கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு ட்ரோனை உருவாக்கியது.