மும்பை: மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் இஸ்லாம்பூர் அமைந்துள்ளது. இந்துத்துவா கட்சியின் துணை அமைப்பான ஷிவ் பிரதிஷ்டான், இந்த மாவட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்தக் கோரிக்கை 1986 முதல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிர சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் அமைச்சர் சாகன் புஜ்பால், “சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் ஈஸ்வர்பூர் என பெயர் மாற்றப்படும். இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.