ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று அதிகாலை 5.59 மணிக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது 101வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.சி.,61-ஐ விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டின் மூலம் பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பு பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட EOS-09 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

1,696 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோளானது மிக முக்கியமான திட்டமாக கருதப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் மூன்றாவது கட்டம் பிரியும் தருணத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இந்த Entire Mission-ஐ பாதித்தது. இதன் காரணமாக திட்டம் முழுமையாக வெற்றிபெறாமல் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் நாராயணன் இந்த விபரீதத்தை உறுதிப்படுத்தியதோடு, “மூன்றாவது கட்டத்தின் பிரிப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு திட்டத்தின் வெற்றியைத் தடுக்க செய்தது. இதற்கான காரணங்கள் தற்போது ஆய்வில் உள்ளன. முழுமையான விசாரணைக்கு பிறகு விரிவான அறிக்கையை வெளியிடுவோம்” என கூறினார்.
இஸ்ரோவின் PSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட் இதுவரை அதிகப்படியான வெற்றிகள் பெற்றதாலும், இந்த தோல்வி சில நுட்பக் குறைபாடுகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. EOS-09 செயற்கைக்கோள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் புவியியல் தரவுகளை சேகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கவிருந்தது.
இந்த தோல்வியால் திட்டத்தின் பயன்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரோவின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் விரைவில் பிழையை சீர்செய்து மீண்டும் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம், இந்திய விண்வெளித் துறையின் மேம்பாடு குறித்து புதிய பரிசீலனைகளை தோற்றுவித்துள்ள நிலையில், அரசாங்கம் மற்றும் விஞ்ஞானர்கள் இந்த அனுபவத்தை எதிர்கால திட்டங்களில் மேம்படுத்தப் பயன்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.