புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே கூறியதாவது:- அம்பேத்கருக்கு காங்கிரஸ் உரிய மரியாதை அளித்து வருகிறது. 1952-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அம்பேத்கரின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால் அதில் உண்மை இல்லை. அம்பேத்கர் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் எஸ்.ஏ.டாங்கே மற்றும் வி.டி. சாவர்க்கரே தேர்தல் தோல்விக்கு காரணம். இதுதான் உண்மை. சட்ட நிபுணர் அம்பேத்கரின் திட்டங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராக இல்லை. இதுதான் உண்மை. அம்பேத்கரை உதடுகளால் மதிக்க வேண்டும் என்று பாஜக பேசுகிறது.

இதயத்திலிருந்து அல்ல. அம்பேத்கரின் பெயரை பாஜக பொய்யான போர்வையில் பயன்படுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இது தொடர்பாக முடிவு செய்துள்ளோம். தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.