பெங்களூரு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்றும் கூறியுள்ளது. தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, வாக்குச்சீட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார். அவர் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்த கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, தேவைப்பட்டால் அதைத் திருத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அதிகாரம் அளித்துள்ளோம். ஏனெனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

கர்நாடகா முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையம், கர்நாடக அமைச்சரவையின் இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்தும். கர்நாடகாவில் 2024 மக்களவைத் தேர்தலில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சீட்டு மோசடி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, நாடு முழுவதும் வாக்குச் சீட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது.