கொல்கத்தா: பல அடுக்கு ஜிஎஸ்டியை சீர்திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், நாடு ஒற்றை விகித ஜிஎஸ்டிக்கு தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “5, 12, 18 மற்றும் 28 சதவீத நான்கு விகித ஜிஎஸ்டி முறை தன்னிச்சையாக முடிவு செய்யப்படவில்லை. பல்வேறு மாநில அளவிலான வரிகளை அருகிலுள்ள அடுக்குகளுடன் இணைப்பதற்கான விரிவான முயற்சியின் மூலம் இது உருவாக்கப்பட்டது” என்றார்.

ஜிஎஸ்டி மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அடையாளம் காணப்பட்ட தேவைகளில் ஒன்று, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் நான்கு விகிதங்களை விரும்பவில்லை என்பதுதான்.
இருப்பினும், ஒற்றை விகித சூழ்நிலையில் நுழைய அவர்கள் தயாரா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. “ஒருவேளை எதிர்காலத்தில் எப்போதாவது,” என்று அவர் கூறினார்.