பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கிராமங்களில் உள்ள சுமார் 19 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 15 கோடி குடும்பங்களுக்கு (79%) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், “நாடு முழுவதும் இன்னும் 4 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது” என்றார்.

இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் குழாய் நீர் இணைப்புகள் உள்ள குடும்பங்களில் மிகக் குறைந்த சதவீதம் 53.9% உள்ளது. இதேபோல், கேரளா (54.13%), ஜார்கண்ட் (54.62%), மற்றும் ராஜஸ்தான் (54.95%) ஆகிய மாநிலங்களும் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதில் பின்தங்கியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.