புதுடில்லி: இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பா.ஜ.க. சிறந்த கட்டமைப்புடன் இருக்கும் கட்சியாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய “போட்டியிடுவதில் ஜனநாயகப் பற்றாக்குறை” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது, அவர் இண்டி கூட்டணி மற்றும் ஆளும் பா.ஜ.க. பற்றி கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம் கூறியதாவது: “மிருதுஞ்சய் சிங் யாதவ் கூறுவது போல் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இண்டி கூட்டணி இன்னும் ஒற்றுமையாக உள்ளது என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது எனக்கு உறுதியாக தெரியவில்லை. இண்டி கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் சல்மான் குர்ஷித் இருப்பதால், அவர் இதற்கு பதிலளிக்கலாம். ஆனால் நான் இதைப் பற்றி உறுதியாக சொல்லமாட்டேன்.”
மேலும், “இண்டி கூட்டணி இன்னும் ஒற்றுமையாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால், அது பலவீனமாக இருப்பது தெரிகிறது. நமக்கு இன்னும் காலம் இருக்கிறது. இண்டி கூட்டணியை மீண்டும் ஒருங்கிணைக்கலாம்,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், பா.ஜ.க. குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை. “பா.ஜ.க. மிகவும் வலிமையாக உள்ளது. என்னுடைய அனுபவத்திலும் சரி, வரலாற்றை படித்து தெரிந்ததிலும் சரி, பா.ஜ.க. போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் நான் பார்த்ததில்லை. அனைத்துத் துறைகளிலும் வலிமையாக இருக்கிறார்கள். இது மற்றும் ஒரு சாதாரண கட்சியல்ல,” என்றார் ப.சிதம்பரம்.
இந்த வீடியோவை பா.ஜ.க.வின் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததைக் குறித்தும், “காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது, ராகுலுக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களுக்கு கூட தெரிந்துள்ளது,” என்ற பதிவை அவர் இடத்தினை முடித்துள்ளார்.