புதுடில்லி: ”அனைவருக்குமான வளர்ச்சி என்பதைக் காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு,” என்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் கூறினார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி, ஜனாதிபதியின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும், நம்மை முன்னேற்றி செல்வதாகவும் அமைந்துள்ளதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2025/02/image-109.png)
பிரதமர், “அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைக் காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மேலும், அது அவர்களின் திட்டத்திற்கு பொருந்தாது. முழு கட்சியும் ஒரே குடும்பத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம்,” என்றார்.
“வளர்ச்சிக்கான எங்களின் திட்டத்தை மக்கள் சோதித்து புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கின்றனர். எங்களின் வளர்ச்சிக்கான திட்டம் என்பது நாடே முதன்மை என்பதாகும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அவரது பேச்சில், “காங்கிரஸ் ஆட்சியில், அனைவரையும் திருப்திபடுத்த வேண்டி இருந்தது. இது தான் அவர்களின் அரசியல்பாதையாக இருந்தது. ஆனால், 2014க்கு பிறகு, நிர்வாகத்திற்கான மாற்று அரசு அமைந்ததும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை,” என்று கூறினார்.
“வளர்ச்சி மீதான பார்வையால் தான் நாட்டு மக்கள் எங்களை 3வது முறையாக தேர்வு செய்தார்கள். நம்மிடம் உள்ள கருவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும். நாட்டின் வளங்களை மக்களின் நலனுக்காக முறையாக பயன்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மேலும், “சமூகத்தில் சாதியை வைத்து விஷம் பரப்பப்பட்டது. ஓ.பி.சி., ஆணையத்திற்கு அங்கீகாரம் கேட்டும் காங்கிரஸ் அதனை தரவில்லை. ஓ.பி.சி., ஆணையத்திற்கு பா.ஜ., அரசு தான் சட்ட அங்கீகாரம் வழங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பட்டிலினம் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இதனை வரவேற்றனர்,” என்று கூறினார்.
“பார்லிமென்டின் இரு வைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பா.ஜ., தான். புதிய பார்லிமென்டில் முதல் முடிவாக மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவது இருந்தது,” என்று பிரதமர் மோடி கூறினார்.
அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசியுள்ளார். “அம்பேத்கரை காங்கிரஸ் வெறுத்த காலம் உண்டு. அவருக்கு எதிராக சதி செய்தது. பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்குவது குறித்து அக்கட்சி பரிசீலனை செய்யவில்லை. அவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தினால் தான், தற்போது காங்கிரஸ் ‘ஜெய்பீம்’ என்கிறது,” என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர், “நிறத்தை மாற்றுவதில் காங்கிரஸ் கை தேர்ந்தது. தற்போது அக்கட்சி வேகமாக தனது முகமுடியை மாற்றியதை அனைவரும் பார்க்கின்றனர்,” என்றார்.
“பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இதனால் தான் கூட்டணி கட்சிகள் கூட அக்கட்சியை விட்டு விலகிச் செல்கின்றன. பிறரை பலவீனப்படுத்தாமல் உங்கள் கட்சியை பலப்படுத்த முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால், மக்கள் எப்போதாவது காங்கிரசை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது,” என்று பிரதமர் மோடி சுட்டி கண்டித்து கூறினார்.