சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நிலவரம் கஷ்டமான நிலையில் சைபர் தாக்குதல்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது. அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் மற்றும் போலி செய்திகள் மூலம் மக்களை நாசமாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சைபர் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளனர். வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள், படங்கள், .apk மற்றும் .exe கோப்புகள் பெரும்பாலும் மோசடியானவை.இவை “ஆர்மி ஜாப் அப்ளிகேஷன்” அல்லது “போர் புதுப்பிப்புகள்” போன்ற தலைப்புகளில் வரும். இதில் இருக்கும் இணைப்புகள் மூலமாக உங்கள் தகவல்களை திருட முடியும்.
இதில் உளவு மென்பொருள், ரான்சம்வேர், ஃபிஷிங் லிங்குகள் போன்றவை அடங்கும்.தீங்கிழைக்கும் கோப்புகளை நீங்கள் திறந்தவுடன், உங்கள் மொபைல் அல்லது கணினியில் உள்ள வங்கி மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இது பெரிய நிதி நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.நம்பக்கூடிய நபர்களிடமிருந்தும் வந்த தகவல்களை திறக்கவே கூடாது.
வாட்ஸ்அப் குழுக்களில் பரவும் சந்தேகத்திற்கிடமான செய்திகளை பகிர வேண்டாம். அவற்றை உடனே புகார் செய்யவும்.மின்னஞ்சல் மூலமாக வரும் மர்ம இணைப்புகள் அல்லது கோப்புகளை கிளிக் செய்ய கூடாது. முறையான நிறுவன முகவரிகளை மட்டும் நம்புங்கள். அனைத்து கணக்குகளிலும் இரண்டு படி பாதுகாப்பை இயக்குவது அவசியம்.சமூக வலைதளங்களில் செய்திகள் பார்க்கும்போது, அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களை மட்டும் பின்பற்றவும். தவறான தகவல்களை பகிர்ந்தால் தண்டனைக்கு ஆளாகலாம்.சந்தேகமான செயல்பாடுகள் நேரில் நேர்ந்தால் 1930 என்ற எண்ணில் அழைத்து புகார் செய்யலாம். மேலும் www.cybercrime.gov.in மூலமாகவும் தகவல் அளிக்கலாம்.இவ்வாறு பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.