By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
    அமெரிக்காவின் அடுத்த அறிவிப்பு… விசா விண்ணப்பதாரர்கள் வலைத்தள கணக்குகள் கண்காணிப்பு
    1 Min Read
    சவுதி அரேபியாவில் லாட்டரியில் இந்தியருக்கு அடித்த யோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    லிவ் இன் உறவு… ராஜஸ்தான் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
    1 Min Read
    கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதாக தகவல்
    1 Min Read
    இந்திய கடற்படை தினம்… பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    1 Min Read
    எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
    0 Min Read
    விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் எடையை குறைக்கணுமா… இதோ உங்களுக்கான எளிய பானம்
    1 Min Read
    உடலுக்கு ஊட்டம் தருகின்ற வைட்டமின் சத்துக்கள் அடங்கிய கத்தரிக்காய்
    1 Min Read
    இண்டிகோ விமானங்கள் ரத்து… விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
    1 Min Read
    தஞ்சாவூரில் தமுஎகச மாநில மாநாடு தொடக்கம்… 3 நாட்கள் நடக்கிறது
    1 Min Read
    3 யானைகளின் சடலம் கண்டெடுப்பு… வனத்துறை விசாரணை
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பதற்றம்.. விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீஸ்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பதற்றம்.. விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீஸ்..!!
இந்தியா

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பதற்றம்.. விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீஸ்..!!

Periyasamy
Last updated: March 20, 2025 9:26 am
By Periyasamy 2 Min Read
Share
SHARE

தலேவால்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் மற்றும் சர்வாண் சிங் பாண்டே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

மேலும், எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை அப்புறப்படுத்தி, தற்காலிக கூடாரங்களை அகற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டு வீடு திரும்ப விரும்பிய விவசாயிகள் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போக்குவரத்துக்கு சிரமம் இல்லாமல் சாலையை சீரமைக்கும் பணியில் போலீஸார் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் – ஹரியானா எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பலமுறை டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். இதனிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது போராட்ட களத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளுடன் மத்திய அரசு குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி, பியூஷ் யோயல் ஆகியோர் சண்டிகரில் விவசாயிகளுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது 7-வது சுற்று பேச்சுவார்த்தையாகும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறும். இதனிடையே மத்திய அரசு குழுவினரை சந்தித்து ஆம்புலன்சில் திரும்பிய தலேவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் போராட்ட களத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, பஞ்சாப்-ஹரியானா-ஷாம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

ஓராண்டாக சாலை மூடப்பட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியானா-கன்னவுரி எல்லையில் தற்காலிக கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், பஞ்சாப் அரசின் உத்தரவின் பேரில், அந்த பகுதியில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்லாமல் இருக்க போடப்பட்டிருந்த கான்க்ரீட் தடுப்புகளையும் போலீசார் அகற்றினர். ஓராண்டாக மூடப்பட்ட சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. மேலும், விவசாயிகள் மீண்டும் திரண்டு போராட்டம் நடத்தாமல் இருக்க பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று கூறியுள்ள ஒலிம்பிக் வீரர் பஜ்ரங் புனியா, விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புனியா, “பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்த விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்தனர். போராட்ட களத்தில் இருந்த விவசாயிகளையும் கைது செய்தனர். கூடாரங்களை அகற்றினர். மத்திய அரசும், பஞ்சாப் அரசும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

You Might Also Like

லிவ் இன் உறவு… ராஜஸ்தான் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதாக தகவல்

இந்திய கடற்படை தினம்… பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்

விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி

TAGGED:farmersTallewaltensionபஞ்சாப்ஹரியானா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

உடல் எடையை குறைக்கணுமா… இதோ உங்களுக்கான எளிய பானம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?