பெங்களூரு: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹாசன் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தராக பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு ரூ.522 தினசரி சம்பளம் வழங்கப்படும். சிறை அதிகாரிகள் கூறியதாவது: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இங்கு நூலக எழுத்தராக பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகங்களை விநியோகிப்பது மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது அவரது பொறுப்பு. இதற்காக, அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.522 சம்பளம் வழங்கப்படும்.

சிறை விதிகளின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஒருவித உழைப்பைச் செய்ய வேண்டும், மேலும் அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் சிறையில் அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர். நிர்வாகப் பணிகளைக் கையாள்வதில் ரேவண்ணா மிகுந்த உற்சாகத்தைக் காட்டி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், சிறை நிர்வாகம் அவருக்கு நூலகர் பணியை வழங்கியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.