புதுடெல்லி: திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை திருத்திய ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி நீட் ரேங்க் பட்டியலில் 15 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். 15 மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ரஜினி முதலிடம் பிடித்துள்ளார்.
முதல் 100 இடங்களில் 10 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர்.
ஜூன் 4ம் தேதி நடந்த நீட் தேர்வை 13,15,853 பேர் எழுதினர். முன்னதாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளுக்கு தமிழகத்தில் இருந்து 1.52 லட்சம் பேர் எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 89,426. திருத்தப்பட்ட முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 89,198 ஆக குறைந்துள்ளது. முன்னதாக, 67 பேர் முதலிடம் பெற்றதாகக் கூறப்பட்டது, இப்போது 17 பேர் மட்டுமே 720 க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள வரிசை எண் விபரம் 12,26,38,41, 42, 51,66,72,74,100. தமிழக மாணவர் ரஜினிஸ் 720 மதிப்பெண்ணும் 26 வது இடத்தை பிடித்த, சையத் ஆரிபின் யூசுப் 715 மதிப்பெண் பெற்றுள்ளார்.