திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5258.68 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தான பொதுக்குழு கூட்டம் நேற்று திருமலை அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமை வகித்தார். இதையடுத்து, 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆண்டு பட்ஜெட்டில் கூட்டத்தில் ரூ. 5258.68 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏழுமலையான் பக்தர்கள் செலுத்திய உண்டியலில் இருந்து கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி கிடைத்தது. அதேபோல், இந்த ஆண்டு ரூ. 1,729 கோடி ரூபாய் காணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியாக, ரூ.1,253 கோடி ரூபாயை தேவஸ்தானம் பெற்ற நிலையில், வரும் நிதியாண்டில், ரூ.1,310 கோடி ரூபாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு லட்டு உள்ளிட்ட பிரசாத விற்பனை மூலம் ரூ.550 கோடி கிடைத்த நிலையில், வரும் ஆண்டில் ரூ.600 கோடி கிடைக்கும். தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.305 கோடி கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டு ரூ.310 கோடி வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.