பாட்னா: பீகாரில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இணைந்து ஏற்பாடு செய்த வாக்காளர் சக்தி யாத்திரையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் பங்கேற்றார். மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பேசுகையில், அவர் மத்திய அரசுக்கு 3 கேள்விகளை எழுப்பினார்.
“தலைமை தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏன் நீக்கப்பட்டார்? தேர்தல் செயல்முறையின் 45 நாட்களுக்குப் பிறகு வாக்குச் சாவடி சிசிடிவி பதிவுகள் அழிக்கப்படும் என்று யார் முடிவு செய்தனர்?

காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர் பட்டியலை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அதே நாளில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற விதி ஏன் மாற்றப்பட்டது?
இதற்கான வழிமுறைகளை யார் வழங்கியது?” என்று சச்சின் பைலட் கேள்வி எழுப்பினார்.