புதுடில்லி: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் குறிப்பிட்ட ஜாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற பரசாரம் பொய்யானது என்பதை உறுதி செய்யும் வகையில், கொலீஜியம் பரிந்துரை மற்றும் நீதிபதிகளின் நியமனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நீதிபதிகள் நியமனங்கள், இடமாற்றங்கள் போன்றவற்றை கொலீஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் குழு முடிவெடுக்கும். இதுவரை அந்த குழு எப்படி செயல்படுகிறது என்பது தெளிவாக வெளிக்கொண்டுவரவில்லை. இதனால், தனிச்சிறப்புமிக்க பிரிவினரே நியமிக்கப்படுகின்றனர், உறவினர் நியமனங்கள் நடக்கின்றன என நீண்டநாள் விமர்சனம் நிலவியது.

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 406 பேரின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 221 பேர் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர், 192 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் என பல்வேறு சமூகப்பின்னணியைக் கொண்டவர்கள் உள்ளனர்.
நியமிக்கப்பட்ட 192 நீதிபதிகளில், 4 சதவீதம் தாழ்த்தப்பட்டோர், 3.6 சதவீதம் பழங்குடியினர், 16 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், 3.6 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 17.5 சதவீதம் பெண்கள் மற்றும் 15.9 சதவீதம் சிறுபான்மையினர் ஆக உள்ளனர். பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 32 சதவீதம் மட்டுமே என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நியமிக்கப்பட்டவர்களில் 7.2 சதவீதம் பேர் மட்டுமே, நீதிபதிகளின் உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உறவினர்களுக்கு மட்டும் நியமனம் என்ற விமர்சனத்தையும் மறுக்கின்றது.
2024 நவம்பர் 5ல் சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு, கொலீஜியம் பரிசீலனை செய்த 103 விண்ணப்பதாரர்களில் 51 பேரை பரிந்துரைத்தது. இதில் 11 பேர் பிற்படுத்தப்பட்டோர், 1 பேர் தாழ்த்தப்பட்டோர், 2 பேர் பழங்குடியினர், 8 பேர் சிறுபான்மையினர் மற்றும் 6 பேர் பெண்கள்.
இந்த தகவல்கள், நீதித்துறையில் ஒரே சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற பழைய பாரம்பரியத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. சமூகநீதி சார்ந்த நியமனங்கள் நடக்கின்றன என்பது இவை மூலம் தெளிவாகிறது.