புதுடெல்லி: மாஞ்சோலை பிரச்னையில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையை சேர்ந்த ஜான்கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கை முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், “மாஞ்சோலை பிரச்னையில் மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ன மாதிரியான நடவடிக்கையை எங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்?”

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்பிரமணியன், ”இந்த எஸ்டேட்டில் வசித்த குடும்பங்களுக்கு, அரசு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “கடந்த 100 ஆண்டுகளாக இந்த வனப்பகுதி தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதியை பொறுத்த வரையில் புலிகள் வசிப்பிடமாகவும், பல்லுயிர் பெருக்கமாகவும், யானைகளின் வழித்தடமாகவும் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் தாமிரபரணி நதி மாசுபடும். தரப்பு நீதிபதிகள், “மாஞ்சோலை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.