திருவனந்தபுரம்: ஒவ்வொரு ஆண்டும், சபரிமலை ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு கும்பாபிஷேக நாள் நாளை ஆகும். இந்த சந்தர்ப்பத்தில், சபரிமலை கோயில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

தந்திரி கண்டர ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கதவைத் திறப்பார். இன்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு கதவு திறக்கப்பட்டு கும்பாபிஷேக நாள் பூஜைகள் நடைபெறும். நாளை இரவு 10 மணிக்கு கோயில் மூடப்படும். ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் 14-ம் தேதி மீண்டும் திறக்கப்படும்.